ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா- அமைச்சர் விஜயபாஸ்கர்

 

ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா- அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடிக்கொண்டிருக்கிறது. ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக கொரோனா உள்ளது. Remdesivier மருந்தும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்து வருகிறது.

ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலக நாடுகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது. கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 54.45 % குணமடைந்துள்ளனர்” எனக்கூறினார்.