அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்!

 

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்!

கொரோனா தடுப்பூசியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செலுத்திக்கொள்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்!

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் ஒட்டுமொத்த உலகமும் அதன் வீரியம் குறைந்துள்ளதால் சற்று நிம்மதியில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. இருப்பினும் கொரோனாவை வருங்காலங்களில் தடுக்கும் முயற்சியாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கொரோனா தடுப்பூசி திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோவிட் தடுப்பூசியை இன்று போட்டுக் கொள்கிறார். இன்று காலை 9 மணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளவுள்ளார். கடந்த 20 ஆம் தேதியே அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ள இருந்த நிலையில் அவசரப்பணி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.