“பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!

 

“பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!

கட்டாயமாக அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையை நம்பி இருக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதே போல, போக்குவரத்து சேவையை தொடங்க மருத்துவ நிபுணர் குழுவும் அரசுக்கு பரிந்துரைத்தது. இதன் காரணமாக, மாவட்டங்களுக்குள் பேருந்தை இயக்க அரசு அனுமதி அளித்தது.

“பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!

அதன் படி 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா அச்சத்தால் பேருந்தில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என பல வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

“பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது” அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!

அப்போது பேசிய அவர், அடுத்த மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையில் உள்ள பஸ் ஸ்டான்ட் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய பாஸ்களை கொடுக்க தொடக்கி விட்டதாக கூறிய அமைச்சர், செப்.15 வரை பழைய பேருந்து பாஸ்கள் செல்லும் என்றும் கட்டாயம் பேருந்துகள் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் தெரிவித்தார்.