அமைச்சர் வேலுமணியின் ஜோரான ஒயிலாட்டம் : வாயை பிளந்த எதிர்க்கட்சிகள்!!

 

அமைச்சர்  வேலுமணியின் ஜோரான  ஒயிலாட்டம் : வாயை பிளந்த எதிர்க்கட்சிகள்!!

தமிழக சட்ட மன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் பிரதான கட்சிகள் இரண்டும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் போட்டியில் களம் காண்கின்றனர்.

அமைச்சர்  வேலுமணியின் ஜோரான  ஒயிலாட்டம் : வாயை பிளந்த எதிர்க்கட்சிகள்!!

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மு.க. ஸ்டாலின் ஒருபுறம் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.இரு பெரும் கட்சிகளும் தங்கள் பரப்புரையில் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் திராவிட கழகங்களின் விமர்சிக்க மறப்பதில்லை. அதே சமயம் ஒருபுறம் வேட்பாளர்கள் தோசை சுடுவது, துணி துவைப்பது, டீ போடுவது என ஜாலியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்  வேலுமணியின் ஜோரான  ஒயிலாட்டம் : வாயை பிளந்த எதிர்க்கட்சிகள்!!

இந்த சூழலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இதனால் அட்டுக்கல் , சுகுனாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் கோவை சுகுனாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் பொதுமக்களுடனும், தொண்டர்களுடனும் ஒயிலாட்டம் ஆடினர். அமைச்சர் வேலுமணியின் நடனத்தை கண்டு அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்தனர்.