மக்களால் வெறுக்கப்பட்டவர் தான் சசிகலா: அமைச்சர் அதிரடி பேட்டி!

 

மக்களால் வெறுக்கப்பட்டவர் தான் சசிகலா: அமைச்சர் அதிரடி பேட்டி!

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, சசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர் என தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் எந்த கட்சி அரியணை ஏறும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க கட்சிகளுக்கிடையே பிரச்சனைகள் மூண்டுள்ளன.

மக்களால் வெறுக்கப்பட்டவர் தான் சசிகலா: அமைச்சர் அதிரடி பேட்டி!

குறிப்பாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதில் முதல்வர் பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் சசிகலாவால் கைகாட்டப்பட்டு அரியணை ஏறிய முதல்வர், தற்போது சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என கூறுவதும் தேர்தல் நெருக்கத்தில் சசிகலா ரிலீஸ் ஆக உள்ளதும் அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மக்களால் வெறுக்கப்பட்டவர் தான் சசிகலா: அமைச்சர் அதிரடி பேட்டி!

இந்த நிலையில் வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.சி வீரமணி, சசிகலாவை எதிர்த்து தான் ஆட்சி நடைபெறுவதாகவும் மக்களால் வெறுக்கப்பட்டவர், தேவையில்லாதவர் என்ற நிலையில் தான் ஆட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், கட்சியை பொறுத்தவரை தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.