மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!
Aug 5, 2020, 10:41 IST1596604271000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,487 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கூறும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால் மதுரையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது” என்றார்.