விவசாயிகளை குழப்பி குளிர்காய நினைக்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் உதயகுமார் தாக்கு!

 

விவசாயிகளை குழப்பி குளிர்காய நினைக்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் உதயகுமார் தாக்கு!

வேளாண் சட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே பொய்யான தகவல்களை மு.க ஸ்டாலின் பரப்பி வருவதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் எடப்பாடி அரசு திமுகவை கண்டு அஞ்சுகிறது என்றும் விமர்சித்தார்.

விவசாயிகளை குழப்பி குளிர்காய நினைக்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் உதயகுமார் தாக்கு!

மேலும், அதிமுக அரசு வேண்டுமென்றே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து தடையை மீறி கூட்டத்தை நடத்திய மு.க ஸ்டாலின் உட்பட, 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அப்பாவி விவசாயிகளை குழப்பி குளிர்காய நினைக்கும் ஸ்டாலினின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது என தெரிவித்தார். ஸ்டாலின் செய்து வரும் கபட நாடகத்தை விவசாய மக்களிடத்தில் அம்பலப்படுத்துவோம் என்றும் காட்டமாக தெரிவித்தார்.