கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணி டிஸ்சார்ஜ்!
Jul 20, 2020, 14:57 IST1595237254000
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொரோனா தொற்று உறுதியாகியனதை தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்கள் கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அமைச்சர் தங்கமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார். இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.