ஜிகா வைரஸால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

 

ஜிகா வைரஸால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறிய தலைகளுடன் குழந்தைகள் பிறக்கும் நிலை இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தார்.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவததால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஜிகா வைரஸால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.