ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜகவை… வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

 

ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜகவை… வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மாதம் 10ம் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், நாளை டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. கொரோனா பாதிப்பு இன்னும் முற்றிலுமாக கட்டுக்குள் வராத சூழலில் டாஸ்மாக் கடைகளை அரசு திறப்பது எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜகவை… வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவித்தார். அதன் படி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாஜக புதுச்சேரியிலும் போராட்டம் நடத்த வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜகவை… வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் ஆளுங்கட்சியுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து பாஜக போராட்டம் செய்ய வேண்டும். தமிழகம் மீது பாஜகவிற்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுத் தர வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா உச்சத்தில் இருந்த போதே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.