தம்பி அண்ணாமலைக்கு கொரோனா வந்தது கவலையளிக்கிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உருக்கம்!

 

தம்பி அண்ணாமலைக்கு  கொரோனா வந்தது கவலையளிக்கிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உருக்கம்!

அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 839 பேர் ஒரேநாளில் உயிரிழந்த நிகழ்வும் நடந்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரத்து 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.

தம்பி அண்ணாமலைக்கு  கொரோனா வந்தது கவலையளிக்கிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உருக்கம்!

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்கள் பலர் #COVID19 தொற்றின் பாதிப்புக்குள்ளாகி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் அரவக்குறிச்சி வேட்பாளர் தம்பி அண்ணாமலை உட்பட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைவரும் நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நவீன மற்றும் நமது பாரம்பரிய தமிழ் மருத்துவம் சார்ந்த நோய் எதிர்ப்பு முறைகளை தொடர்ந்து கையாண்டு இந்த பெருந்தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.