அதிமுக ஆட்சியில் 200 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையா?- அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம்

 

அதிமுக ஆட்சியில் 200 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையா?- அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம்

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அரசியல் சுய லாபத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “எந்த ஆதாரமும் இல்லாமல் 200 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என எங்கள் பெண்களை கேவலப்படுத்துகின்றனர். ஓட்டுக்காக பொள்ளாச்சி பெண்களை திமுக கேவலப்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி ராசியினால் ஜனவரியிலும் மழை பெய்கிறது. மக்கள் செழிப்பாக உள்ளார்கள். பொய் பேசுவது தான் திமுகவின் கொள்கை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும், பொள்ளாச்சி விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கிறோம். பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவங்கள் போன்று எங்கும் நடக்க கூடாது. சுய இலாபத்திற்காக, ஓட்டுக்காக, தேர்தலுக்காக திமுக என்ன வேண்டுமானாலும் செய்யும் எங்கள் மீதான திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.

அதிமுக ஆட்சியில் 200 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையா?- அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம்

ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன என சொல்ல முடியுமா?.யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க நூறு சதவீதம் ஒத்துழைப்பு அளிப்போம். சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். பொள்ளாச்சி வந்த கனிமொழி வாகனத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தவே இல்லை. தடுத்து நிறுத்தியதாக நாடகம் ஆடினர். திமுக மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது” எனக் கூறினார்.