அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

 

அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய செயல் கண்டிக்கத்தக்கது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் முழு முதற் கடவுளான முருகப்பெருமானிடம் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பால தேவராய சுவாமிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டிகவசம் தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்திப் பாடலாகும்.

அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

இப்பாடலில் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து கவசமாக காக்கப்பட வேண்டுமென முருகப்பெருமானிடம் மனமுருகி முருகனடியார்கள் பாடி இறையருள் பெருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி தவறாக அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.