கொரோனாவை பூஜ்ஜியமாக்க முதல்வர் பணியாற்றுகிறார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

 

கொரோனாவை பூஜ்ஜியமாக்க முதல்வர் பணியாற்றுகிறார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பணியாற்றி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வாகனங்களை தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கொரோனாவை பூஜ்ஜியமாக்க முதல்வர் பணியாற்றுகிறார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

பின்னர், பெரியகுளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில் பாலாஜி, மக்களின் தேவையை அறிந்து அதனை செய்து தரும் அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களிடம் பெறப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மேலும், உடனடியாக தீர்வு காணப்படாத மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.