பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக ஏன் போராடவில்லை? – பாஜகவை விளாசிய செந்தில் பாலாஜி!

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக ஏன் போராடவில்லை? – பாஜகவை விளாசிய செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது பாஜகவினர் முன்வைத்த அனைத்து கருத்துக்களும் திமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக ஏன் போராடவில்லை? – பாஜகவை விளாசிய செந்தில் பாலாஜி!

இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதிப்பு குறைவாக 27 மாவட்டங்களில் தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. மற்ற 11 மாவட்டங்களில் திறக்கப்படவில்லை. பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்த போதே கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு தான் இருந்தது. ஆனால், பாதிப்பு உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் நலனில் முதல்வர் முழு கவனம் செலுத்தி வருகிறார். முதல்வரின் உத்தரவின் பேரில் மதுபான கடைகளில் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் கடத்தி வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக ஏன் போராடவில்லை? – பாஜகவை விளாசிய செந்தில் பாலாஜி!

பாஜகவின் போராட்டம் குறித்து பேசிய செந்தில் பாலாஜி, பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவில் பாதிப்பு குறையாத போதும் மதுபானம் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடும் பாஜக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக அரசியலுக்காகவும் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்த போராட்டத்தை நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.