அரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

 

அரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட புள்ளப்பநாய்க்கன்பாளையம், ஒடையாக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் கோபி நகராட்சி பகுதிகளில் 1.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற
திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

அரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்
அரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், கோபிசெட்டிபாளையம் பகுதியினை சோலைவனமாக மாற்றும் வகையில் அடர்வனம் நடும் திட்டத்தின் கீழ் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்