கொரோனா குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

கொரோனா குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கு கல்வித்துறை வெளியிட்டது. ஆனால், ஆன்லைன் வகுப்பால் மாணவர்களுக்கு பயன் இல்லை எனவும் மாணவர்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும் எனவும் பல்வேறு கருத்துகள் எழுந்துவருகின்றன. சமீபத்தில் டிசம்பர் மாதம் வரையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய அரசின் நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

எப்போது தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என வெகுவாக கேள்வி எழுந்து வரும் நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டததின் முடிவில் பள்ளிகள் திறப்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து பேசிய அவர், தற்போது இருக்கும் நடைமுறையே தொடரும் என்றும் மாற்று வழிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.