‘பள்ளி திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்’ : அமைச்சர் செங்கோட்டையன்

 

‘பள்ளி திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்’ : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

‘பள்ளி திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்’ : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு எடுப்பார்.. பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம். 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்” என்றார்.

‘பள்ளி திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்’ : அமைச்சர் செங்கோட்டையன்

இதனிடையே சென்னை அண்ணா நூலகத்தில் பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். வரும் அக்.15 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா சூழலுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.