சசிகலா பத்தி பேசுங்க… கையெடுத்து கும்பிட்டு சென்ற மூத்த அமைச்சர்

 

சசிகலா பத்தி பேசுங்க… கையெடுத்து கும்பிட்டு சென்ற மூத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மூத்த அமைச்சர் என்ற முறையில் சசிகலா வருகை குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்றார்.

சசிகலா பத்தி பேசுங்க… கையெடுத்து கும்பிட்டு சென்ற மூத்த அமைச்சர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “நாங்கள் எங்கள் வேலையை கூறுகிறோம். பள்ளி திறப்பது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்டுபின் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் 28 ஆயிரம் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்கள் முன்னுரிமை வழங்கப்படும். அதற்கு பிறகு மத்திய அரசு கூறும்படி தடுப்பூசி போடப்படும்.

பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாது பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.