தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன்

 

தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன்

2021 ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று நிலையான ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தங்கள் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாதம் பாளையத்தில் அம்மா மின் கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசின் சாதனைகளை வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட டாக்டர் ஆகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகளும் டாக்டராகலாம்- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது சாலை அகலப்படுத்தும் பணிக்காக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. காரணம் வீடுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை. தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக்குழந்தைகள் டாக்டர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் கூறினார்.