7.5 சதவிகித மருத்துவ இட ஒத்துகீடு விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 

7.5 சதவிகித மருத்துவ இட ஒத்துகீடு விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து, 67 பயனாளிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

7.5 சதவிகித மருத்துவ இட ஒத்துகீடு விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கொரோனா காலங்களில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி, முதல்வரை பாராட்டி உள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 7.5 சதவிகித மருத்துவ இட ஒத்துகீடு விரைவில் நிறைவேற்றப்படும். அதில் அரசு பள்ளியில் படித்த 303 மாணவா்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்றியதே நாங்கள்தான். மாணவா்களுக்காக இன்று பேசுபவா்கள் அதை செய்யவில்லை. தமிழகத்தில் முதல்முதல் ஒரு சட்டம் இயற்றியிருப்பது வரலாறு” என தெரிவித்தார்.