பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

 

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல்  முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல்  முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் புதிதாக மாணவர் சேர்க்கை  குறித்து இதவரை எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல்  முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

இந்நிலையில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பற்றி முதல்வர் 10 ஆம் தேதி அறிவிப்பார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மீண்டும் விளக்கமளித்தார்.