தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது?..முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!

 

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது?..முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, கல்லூரிகளில் எப்போது தேர்வு நடைபெறும் என்று பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே 10 ஆம் வகுப்பு மனவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது?..முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!

அதன் படி ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25 ஆம் தேதி முடிகிறது. அதனால் பள்ளிகளை எப்போது திறப்பது என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. அதே போல 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்படுமா என்ற குழப்பமும் நிலவுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.