துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் பெயரை தவிர்த்த அமைச்சர்!

 

துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் பெயரை தவிர்த்த அமைச்சர்!

கோட்டூர்புரத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியின் பெயரை மட்டும் கூறிவிட்டு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பெயரை கூறாமல் தவிர்த்து விட்டார்.

அதிமுகவில் எழுந்துள்ள முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு நாளை முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஈபிஎஸ் போட்டியிடுவாரா? ஓபிஎஸ் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு நாளை பதில் கிடைத்து விடும். இது தொடர்பாக அதிமுகவில் 2 நாட்களுக்கு முன்னர் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் ஈபிஎஸ் போட்டியிடட்டும் என ஓபிஎஸ் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என்பது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே தெரிய வரும்.

துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் பெயரை தவிர்த்த அமைச்சர்!

இதனால் இன்று காலை முதல் துணை முதல்வர் ஓபிஎஸ் உடனும் முதல்வர் ஈபிஎஸ் உடனும் அதிமுக அமைச்சர்களும் மூத்த தலைவர்களும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பெயரை சொல்ல தவிர்த்து விட்டார்.

துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் பெயரை தவிர்த்த அமைச்சர்!

வழக்கமாக எல்லா பேட்டிகளிலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெறும் என கூறும் அமைச்சர் செங்கோட்டையன், இன்று முதல்வர் பெயரை மட்டும் கூறிவிட்டு ஓபிஎஸ் பெயரை தவிர்த்து விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.