பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

 

பள்ளிகள் திறப்பு குறித்து   அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பள்ளிகள் திறப்பு குறித்து   அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

அக்.15 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அந்தந்த மாநிலத்தின் கொரோனா சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது. இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகள் திறப்பு குறித்து   அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.