தேர்தலிலிருந்து விலக தயார் – செல்லூர் ராஜூ

 

தேர்தலிலிருந்து விலக தயார் – செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ பெத்தானியாபுரம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கட்சி தொண்டரின் பெண் குழந்தைக்கு கனிஸ்காஸ்ரீ என பெயர் சூட்டினார். வாக்குசேகரிக்க வந்த அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வீடு, வீடாக சென்று செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தலிலிருந்து விலக தயார் – செல்லூர் ராஜூ

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “எனது துறையில் எந்த இடத்திலும் நான் முறைகேடு ஊழல் செய்ததில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். ஊருக்கும், உறவினருக்கும் மட்டும் தெரிந்த என்னை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் மதுரை மக்கள். தொகுதி மக்களுக்காக நான் நிறைய உழைத்திருக்கிறேன். பொது மக்களின் வரவேற்பு மூலம் உழைப்பிற்கான அறுவடையை தற்போது பார்க்கிறேன். அரசியலை வைத்து தொழில் நடத்தும் அளவிற்கு நான் இழிவான பிறவி இல்லை” எனக் கூறினார்.