“குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் தான் கூட்டம் கூடியது; ஆனால் திமுக ஜெயிக்கவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

 

“குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் தான் கூட்டம் கூடியது; ஆனால்  திமுக ஜெயிக்கவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

நடிகர்களை பார்ப்பதற்கு மட்டும்தான் கூட்டம் கூடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் தான் கூட்டம் கூடியது; ஆனால்  திமுக ஜெயிக்கவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பழனிசாமி, தொடர்ந்து பல மாவட்டங்களில் பரப்புரை செய்து வருகிறார். அதே போல் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அதிமுகவின் 4 ஆண்டுகால திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. அதிமுக அரசின் ஊழல், குறைகளை சுட்டிக்காட்டி தேர்தலில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது திமுக. அதேபோல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ள பாஜக தொடர்ந்து திரை நட்சத்திரங்களை களமிறக்கி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

“குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் தான் கூட்டம் கூடியது; ஆனால்  திமுக ஜெயிக்கவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர்களை பார்ப்பதற்கு மட்டும்தான் கூட்டம் கூடும்; அதை ஓட்டு என நினைக்க முடியாது. 2011 தேர்தலில் குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் தான் கூட்டம் கூடியது; ஆனால் திமுக ஜெயிக்க முடியவில்லை என்றார்.