கொரோனாவை பரப்பிய அமைச்சர்.. பீதியில் கதறிய பொதுமக்கள்!

 

கொரோனாவை பரப்பிய அமைச்சர்.. பீதியில் கதறிய பொதுமக்கள்!

மதுரை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவை பரப்பியதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் போட்டியிடும் செல்லூர் ராஜு, நேற்று பாப்பாகுடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ‘என்னை 2 முறை தேர்ந்தெடுத்தவர்கள் மதுரை மேற்கு மக்கள். அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்.

கொரோனாவை பரப்பிய அமைச்சர்.. பீதியில் கதறிய பொதுமக்கள்!

கொரோனா காலகட்டத்தில் கூட மக்களை சந்தித்து உதவிகள் வழங்கினேன். எனது உயிரே மதுரை மேற்கு தொகுதி மக்கள் தான். அவர்களுக்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை. எனது பணியை என்றென்றும் தொடர்ந்து செய்வேன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று பேசினார்.

அரசியல் கூட்டம் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை தான். அதிலும் அமைச்சர் பரப்புரை மேற்கொள்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜு பரப்புரைக்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அதில் சிலர் மாஸ்க் அணியாமலும் கூட கூட்டத்திற்கு வந்துள்ளனர். அக்கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர், நீங்க எங்களுக்காக உயிர விடுறது இருக்கட்டும்.. இப்படி மாஸ்க் போடாம கூட்டம் நடத்துனா எங்க உயிர் போயிடும் போல இருக்கே என்று சொல்லியபடி அங்கிருந்து சென்றுள்ளன