முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக பிரச்சாரத்தில் கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்!

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக பிரச்சாரத்தில் கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்!

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். கடந்த 2 சட்டசபை தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ, 3வது முறையாக மேற்கு தொகுதியில் களம் காண்கிறார். தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக பிரச்சாரத்தில் கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்!

பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ‘என்னை பெத்தெடுத்த எங்காத்தாவ போலயே இருக்க தாயீ’ எனக் கூறி ஒரு மூதாட்டியை கண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர்விட்டு அழுதார்.