‘அவரை மதுரைக்கு வரச் சொல்லுங்க’ – ஸ்டாலினுக்கு சவால் விடும் அமைச்சர்!

 

‘அவரை மதுரைக்கு வரச் சொல்லுங்க’ – ஸ்டாலினுக்கு சவால் விடும் அமைச்சர்!

அதிமுகவை எதிர்த்து திமுக எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்று விடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது. அதிமுக அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும், அதிமுக பிரமுகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அதே போல, எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்? என்ற முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். இப்படி, விமர்சனங்களை முன்வைப்பதும் அதற்கு எதிர் தரப்பினர் பதிலளிப்பதுமாகவே நாட்கள் நகருகிறது.

‘அவரை மதுரைக்கு வரச் சொல்லுங்க’ – ஸ்டாலினுக்கு சவால் விடும் அமைச்சர்!

இதனிடையே பிரதான கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளன. ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை நடத்தி முடித்திருக்கும் மு.க. ஸ்டாலின், தனது அடுத்தகட்ட பிரச்சாரம் ‘உங்கள் தொகுதியில்’ என்ற பெயரில் ஜன.29ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

‘அவரை மதுரைக்கு வரச் சொல்லுங்க’ – ஸ்டாலினுக்கு சவால் விடும் அமைச்சர்!

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் ஏன் சென்னையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்; அவரை மதுரைக்கும் வரச்சொல்லுங்கள் என ஸ்டாலினுக்கு சவால் விட்டிருக்கிறார். மேலும், அதிமுக போட்டியிடும் இடங்களில் திமுக நின்றாலும், ஏன் ஸ்டாலினே நின்றாலும் தோற்று தான் போவார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.