திமுக அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் சேகர் பாபு

 

திமுக அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் சேகர் பாபு

ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதும் விமர்சிப்பதும் வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடந்திருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு பணியில் திமுக ஆட்சியில் பாரபட்சம் நிலவுவதாக சில அதிமுக எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் புகாரும் அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் திமுக அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

திமுக அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் சேகர் பாபு

இந்த நிலையில், திமுக அரசு வெளிப்படையாகவே செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுகிறது. எதையும் அரசு மறைக்கவில்லை. கொரோனா இறப்பு எண்ணிக்கையையும் குறைத்துக் காட்ட வில்லை. அதில் அரசியலும் செய்யவில்லை. திருக்கோயில் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் வெளிப்படையாக காட்டுகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் 13 சித்த மருத்துவமனைகளே கொண்டுவரப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் 50 மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டதாகவும் சித்த வைத்தியம் கோருவோருக்கு மட்டும் சித்த வைத்திய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.