‘அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்’

 

‘அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்’

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக, இந்த தேர்தலில் தான் 5 முனை போட்டி நிலவியது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய 5 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர். கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக இருக்கின்றன.

‘அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்’

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் திமுக அரியணை ஏறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சியை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளும் என அக்கட்சியின் பிரமுகர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியை பிடிக்கிறதா? அல்லது அதிமுக ஆட்சியை தக்க வைக்கிறதா? என்பது மே 2ம் தேதி தெரிய வந்துவிடும்.

‘அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்’

இந்த நிலையில், அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறுமென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ‘அதிமுக 140 இடங்களில் வெற்றி பெறும், கூட்டணி கட்சி எல்லாம் சேர்த்தால் 190 இடங்கள் வரை வெற்றி பெறும். இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப் போய்விட்டது. இரட்டை தலைமை கூடுதல் பலம் தான்’ என்று அவர் கூறியுள்ளார்.