‘மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பொய்’ – அமைச்சர் தங்கமணி காட்டம்!

 

‘மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பொய்’ – அமைச்சர் தங்கமணி காட்டம்!

நிலக்கரி கொள்முதலில் மோசடி நடைபெற்றதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது உண்மை அல்ல என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

‘மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பொய்’ – அமைச்சர் தங்கமணி காட்டம்!

இது குறித்து பேசிய அவர், நிலக்கரி கொள்முதலில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக ஸ்டாலின் கூறுகிறார். அது உண்மை இல்லை. 2011 – 2015 வரை தவறு நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறும் சமயத்தில் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தேன். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வந்துவிடும் என மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று கூறினார். மேலும், குமாரபாளையத்தில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரைவில் முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பொய்’ – அமைச்சர் தங்கமணி காட்டம்!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அடித்துச் சொல்லும் அவர், ஆதாரத்துடன் 90 பக்க மனுவை ஆளுநரிடம் கொடுத்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்திருக்கிறார். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள், ஊழலுக்கு பெயர் போனவர்களாக இருப்பதாக பிரச்சாரத்தின் போது விமர்சித்திருந்தார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசிய போது கூட, வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல் வெளியே தெரியாத வகையில் அமைச்சர் தங்கமணி ஊழல் செய்து வருகிறார் என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே, தற்போது அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.