தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் புகழாரம்!

 

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் புகழாரம்!

தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது. தனது செயல்பாடுகளால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர் ஸ்டாலின், சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது போற்றுதலுக்கு உரியது.

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் புகழாரம்!

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றத்தையும் வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்கிறார் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனோ பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது. மருத்துவத் துறைக்கு ஊரக வளர்ச்சித் துறையும் உதவியாக செயல்பட்டது. காவல்துறை, வருவாய்த்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஊரக வளர்ச்சித்துறை எப்படி நடைபெற்றதோ அவ்வாறு மீண்டும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.