தொண்டர்கள் அனைவரும் இன்றிலிருந்தே வாக்கு சேகரிக்க தொடங்குங்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

தொண்டர்கள் அனைவரும் இன்றிலிருந்தே வாக்கு சேகரிக்க தொடங்குங்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விரைவிலேயே வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் அனைவரும் இன்றிலிருந்தே வாக்கு சேகரிக்க தொடங்குங்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் அதிமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார், “தேர்தல் வரும்போது மட்டும் புதிது புதிதாக ஆட்கள் வந்து ஜாதி, மதம், இனம் ஆகியவற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வந்துவிடுவார்கள். தேர்தல் காலங்களில் இதனை வழக்கமாக வைத்துள்ளார்கள், ஆகவே இந்த தேர்தலில் நாம் ஜாக்கரத்தையாக இருக்கவேண்டும்.

தொண்டர்கள் அனைவரும் இன்றிலிருந்தே வாக்கு சேகரிக்க தொடங்குங்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விரைவிலேயே வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தொண்டர்கள் அனைவரும் இன்றிலிருந்தே மக்களோடு மக்களாக சேர்ந்து வாக்கு சேகரிக்க தொடங்க வேண்டும். தற்போது அங்கொன்றும், இங்கொன்றும் பதவி கிடைக்காதவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று கட்சியில் சேர்த்து வருகின்றனர். அதிமுக தொண்டர்களை தொட்டுப் பார்க்க முடியாது. எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காத அதிமுக தொண்டர்களுக்கு பதவி தருவதாக கூறி ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அவர்களி பலவீனப்படுத்தி விட முடியாது” எனக் கூறினார்.