“தன்னை பார்க்க வந்த தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர்” : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

 

“தன்னை பார்க்க வந்த தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர்” : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

தன்னை பார்க்க வந்த தொண்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

“தன்னை பார்க்க வந்த தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர்” : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், இன்று காலை திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம், சாத்தாங்குடி, மேல உரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திய அமைச்சர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு இலவச முகக்கவசங்களையும் வழங்கினார். அப்போது நிகழ்ச்சி முடிந்து வந்து கொண்டிருந்த அமைச்சரை பார்க்க தொண்டர் ஒருவர் பக்கத்தில் வர,அவரை பிடித்து அமைச்சர் கோபமாக தள்ளி விட்டார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

“தன்னை பார்க்க வந்த தொண்டனை தள்ளிவிட்ட அமைச்சர்” : அதிர்ச்சியில் அதிமுகவினர்!

அமைச்சர் ஒருவர் கட்சி தொண்டரிடம் கடுமையாக நடந்து கொண்டதுஇணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.