முதலமைச்சராகிறார் ஸ்டாலின்… பாஜகவிலிருந்து வந்த முதல் வாழ்த்து – வாழ்த்தியது யார்?

 

முதலமைச்சராகிறார் ஸ்டாலின்… பாஜகவிலிருந்து வந்த முதல் வாழ்த்து – வாழ்த்தியது யார்?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்த்த வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்பதையே வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதியாகி விட்டது. 234 தொகுதிகளில் 153 தொகுதிகளில் வெற்றிமுகம் கொண்டுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

முதலமைச்சராகிறார் ஸ்டாலின்… பாஜகவிலிருந்து வந்த முதல் வாழ்த்து – வாழ்த்தியது யார்?

இச்சூழலில் எதிர் முகாமில் இருக்கும் பிரதான எதிரியான பாஜகவிலிருந்து எப்போது வாழ்த்து வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டது. ஆம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலினின் கட்சி வெற்றிபெற்றிருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துகளைக் கூறிக் கொள்ள விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.