எம்.பி டி.ஆர்.பாலுவின் கடிதத்திற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!

 

எம்.பி டி.ஆர்.பாலுவின் கடிதத்திற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்குமாறு எம்.பி டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

லட்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் காணாமல் போனதையடுத்து அவர்களை மீட்குமாறு கோரிக்கைகள் வலுத்தது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, டெல்லி சென்ற எம்.பி டி.ஆர்.பாலு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-ஐ நேரில் சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எம்.பி டி.ஆர்.பாலுவின் கடிதத்திற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!

இதனிடையே, கடந்த மே மாதம் மத்திய கடலூர் கடலோர காவல் படையினரின் உதவியுடன் மீனவர்கள் மீட்டுத் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்.பி டி.ஆர் பாலுவின் கோரிக்கைக்கு கடிதம் வாயிலாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார். தமிழக மீனவர்களைத் தேடும் பணியை துரிதப்படுத்துமாறு கடலோர காவல் படையினருக்கு தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.