கொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள் துணி கட்டிக்கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

 

கொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள் துணி கட்டிக்கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

கொரோனா வைரஸ் வருவதை தடுக்கும் சித்த மூலிகைகள் அடங்கிய மருந்துப்பெட்டகத்தை தயார் செய்து வருகிறது ராஜபாளையத்தில் உள்ள அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனம். இதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருநெல்வேலி பயணத்தின்போது பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அந்த மாவட்டத்துக்கார என்பதால் அதுபற்றிய விபரத்தை கேட்டிருக்கிறார். நேரில் சென்று முழுவிபரத்தையும் சொல்கிறேன் என்ற ராஜேந்திரபாலாஜி அந்த மருந்து நிறுவனத்துக்கே போய்விட்டார்.

நிலவேம்பு, கபசுர குடிநீர் கசாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதுவே கொரோனாவை தடுக்கும். மேலும், கொரோனாவை தடுக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்து பெட்டகத்தை காண்பித்து விளக்கம் கொடுத்துள்ளனர் அரவிந்து ஹெர்பல்ஸ் நிர்வாகிகள்.

கொரோனா தடுப்புக்கான ஹோமியோ சொட்டு மருந்தை அமைச்சரிடம் கொடுத்துள்ளனர். மேலும், 18 வகை மூலிகை துகள்கள் கொண்டு கட்டப்பட்ட மஞ்சள் துணியை அமைச்சரின் கையில் கட்டிவிட்டுள்ளனர். முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்களுக்கும் அந்த சொட்டு மருந்து, மஞ்சள் துணியை வாங்கிச்சென்றுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

500, 1000 ரூபாயில் அந்த சொட்டு மருந்தும், மருந்து பெட்டகமும் விரைவில் மார்க்கெட்டுக்கு வரவிருக்கிறது.