’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்’ பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம்!

 

 ’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்’ பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டங்களை நடத்து வருகின்றனர். போராட்டத்தின் ஒரு வடிவமாக பாலை மண்ணில் கொட்டுவதையும் செய்வார்கள். அவர்கள் குறித்து தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய ஒரு சொல் சர்ச்சையாகியுள்ளது.

 ’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்’ பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம்!

இது குறித்து  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் “தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகத்தின் அறிக்கைகள் ஆவின் பால் விற்பனை மற்றும் கொள்முதல் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என தெரிவிக்கும் போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்ய மறுத்து திருப்பி அனுப்புவதும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பதும் ஏன்..? என்பதை தமிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் “தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.25கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் சூழலில் அதில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதோ வெறும் 35லட்சம் லிட்டர் மட்டுமே என்கிற நிலையில் ஆவினுக்கு பால் வழங்குபவர்களை மட்டும் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களாக பார்ப்பதோடு தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களை கண்டு கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 ’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்’ பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம்!

மாட்டின் மடியில் இருந்து கறந்த பாலினை 6மணி நேரத்திற்குள் பதப்படுத்தியாக வேண்டும், இல்லையென்றால் அந்த பாலில் கிருமிகள் சேர்ந்து கெடத் தொடங்கி விடும் அல்லது பதப்படுத்தாமல் நேரம் கடந்த பாலினை மக்கள் அருந்தினால் அது பல்வேறு உடல் உபாதைகள் வருவதற்கு வழி வகுத்து விடும் என்கிற நிலையில் வேறு வழியின்றி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலினை கொட்டி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்களே முக்கிய குற்றவாளிகள் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அப்படியானால் பாலினை சாலையில் கொட்டி போராடும் பால் உற்பத்தியாளர்கள் சாடிஸ்டுகள் என்றால் அவர்களை அந்த நிலைக்கு தள்ளிய ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் மற்றும் தமிழக அரசும் யார்…?

 ’அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்’ பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம்!

”நேற்று முன்தினம் (23.07.2020) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது “சாலையில் பாலை கொட்டி போராடுபவர்கள் சாடிஸ்ட்கள்” என பால் உற்பத்தியாளர்கள் மீது பகிரங்கமாக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கொரோனா பேரிடர் காலத்திலும் கூட விவசாயம் சார்ந்த அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி உற்பத்தி செய்து தரும் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களை சாடிஸ்டுகள் என்று விமர்சனம் செய்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.