‘கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம்’.. எதை பற்றி பேசுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?!

 

‘கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம்’.. எதை பற்றி பேசுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தில் சித்த மருத்துவத்துக்கு பரிந்துரைக்க பட்டுள்ளதாக சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த மருந்துகளை அரசு சிகிச்சை மையங்களில் கட்டணமின்றி மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

‘கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம்’.. எதை பற்றி பேசுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?!

இந்த நிலையில், வழக்கமாக சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சித்த மருத்துவத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது, கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்றும் தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.