திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்களெல்லாம் உதயநிதியிடம் கைக்கட்டி நிற்கின்றனர்- ராஜேந்திர பாலாஜி

 

திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்களெல்லாம் உதயநிதியிடம் கைக்கட்டி நிற்கின்றனர்- ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடியில் தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ444 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்களெல்லாம் உதயநிதியிடம் கைக்கட்டி நிற்கின்றனர்- ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக் கூட்டத்தில் பேசுகிறார். படிப்படியாக வளர்ந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. சினிமாவில் நடித்துவிட்டு ஒரே தாவாக தாவி ஸ்டாலின் தோளில் ஏறி உட்கார்ந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்களெல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கைகட்டி நிற்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை அதிமுகவில் கிடையாது” எனக் கூறினார்.