‘முதல்வர் பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

‘முதல்வர் பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எந்த தடையும் இன்றி முதல்வர் பழனிசாமியின் ஆட்சியே தொடரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அதிமுக தற்போது பூகம்பமாக கிளம்பியிருக்கும் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதன் காரணமாக ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் இடையே மட்டுமே எழுந்து வந்த பிரச்னை, தற்போது கட்சியை பிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது. ‘அடுத்த வேட்பாளர் யார்’ இந்த கேள்விக்கு விடை கொடுக்க, அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்டியும் முடிவெடுக்க முடியவில்லை. இருந்தாலும், வரும் 7ம் தேதி இதற்கு ஒரு விடை தெரியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘முதல்வர் பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒரே கட்சியில், இரு வேறு அணியாக இருப்பது அவர்களது செயல்பாடுகளிலேயே தெரிகிறது. இவ்வாறு, தேர்தல் நேரத்தில் கட்சியில் பல குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில் அமைச்சர்களோ கட்சியின் தலைமை அறிவிப்பதற்கு முன்னர், ஈபிஎஸ் தான் என்றென்றும் முதல்வராக இருப்பார் என கூறி வருகின்றனர்.

‘முதல்வர் பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் மக்களால் போற்றப்படும் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி எந்த வித வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். மேலும், உ.பியில் ராகுல் காந்தி விழுந்திருக்கலாம், நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறினார்.