மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் செத்துவிடும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் செத்துவிடும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியிலும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் செத்துவிடும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இப்போது அமைந்திருக்கும் அம்மா மினி கிளினிக் பகுதியான மல்லி, டில்லிக்கு இணையான பகுதி. சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக இங்கு மினிக்கிளினிக்கை தொடங்கியுள்ளோம். மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து செத்து விடும். சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை, எனவே சுக்குக்கு மிஞ்சிய மருந்து ஏதும் இல்லை” என பழமொழியை எடுத்து விளக்கினார்