“கொரோனா 3வது அலையை தடுக்க மத்திய அரசு இதை செய்ய வேண்டும்” அமைச்சர் யோசனை

 

“கொரோனா 3வது அலையை தடுக்க மத்திய அரசு இதை செய்ய வேண்டும்” அமைச்சர் யோசனை

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விபரங்களை ஒன்றிய அரசு வழங்கினால் 3வது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா 3வது அலையை தடுக்க மத்திய அரசு இதை செய்ய வேண்டும்” அமைச்சர் யோசனை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரையில் நேற்று 14 ஆயிரம் பேருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் 74 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. 2 ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 3 ஆம் அலையை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 ஆம் அலையின் போது மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது. மதுரையில் 3 ஆம் அலையை எதிர்க்கொள்ள முன் மாதிரியாக பைலட் புராஜக்ட் என்ற திட்டத்தை உருவாக்க உள்ளோம். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 3ம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் 3 ஆம் அலை வர வாய்ப்பு இல்லை. எங்கே 3 ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கோவின் செயலி ஒன்றிய அரசின் செயலி என்பதால் மாநில அரசிடம் தடுப்பூசி செலுத்திய நபர்கள் குறித்த தகவல் இல்லை.தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விபரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம். மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் விபரங்களை நாளை முதல் மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உள்ளது. தடுப்பூசி செலுத்துபவர்களின் விபரங்களை அனைத்து இடங்களுக்கும் பகிர்வது தான் கூட்டாச்சி தத்துவம். தடுப்பூசி செலுத்திய நபர்களின் 70 சதவீதம் தகவல்கள் மட்டுமே மாநில அரசிடம் உள்ளது” எனக் கூறினார்.