அதிமுக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது : அமைச்சர் பெருமிதம்!

 

அதிமுக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது : அமைச்சர் பெருமிதம்!

யார் தேர்தலுக்கு வந்தாலும் கவலை இல்லை; அதிமுக வெற்றி நடை போட்டுக் கொண்டிருகிறது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழக அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டால் 435 மாணவர்கள் பயன் அடைத்துள்ளனர். மாணவர்களின் மருத்துவக் கனவை அரசு நினைவாக்கி இருக்கிறது. சசிகலா வந்ததில் எல்லாம் அதிமுகவினர் கவனம் செலுத்தவில்லை. தேர்தலை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

அதிமுக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது : அமைச்சர் பெருமிதம்!

தொடர்ந்து, தேர்தல் பணிகளை விரைந்து முடிப்பதிலேயே அதிமுகவினர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் பற்றிய கவலை அதிமுகவுக்கு இல்லை. யார் வந்தாலும்.. யார் போனாலும் அதிமுகவுக்கு கவலையில்லை என்று தெரிவித்தார். மேலும், அமமுகவில் இருந்து பலர் அதிமுக பக்கம் வந்து விட்டார்கள் என்றும் தொண்டர்களை ஊக்குவிக்க டிடிவி தினகரன் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.