“ரஜினி-கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது” – அமைச்சர் பாண்டியராஜன்

 

“ரஜினி-கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது” – அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுகவின் வெற்றியை எந்த கூட்டணியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

“ரஜினி-கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது” – அமைச்சர் பாண்டியராஜன்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை அது பாதிக்காது. ரஜினி மற்றும் கமல்ஹாசன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து மின்வாரியத்தில் தனியார் மூலமாக ஆட்கள் சேர்ப்பு நடத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மின்வாரியம் தனியார் மயமாகாது. பிரைவேட் வேறு கார்ப்பரேட் வேறு என பாண்டியராஜன் பதில் அளித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மாதங்களுக்கு முன்னரே நிலம் ஒதுக்கி விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

“ரஜினி-கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது” – அமைச்சர் பாண்டியராஜன்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி கமல்ஹாசன் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கி, யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கிறது. அதே வேளையில், ரஜினியுடன் கூட்டணி அமைக்க தயார் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக, சட்டமன்றத் தேர்தலில் ரஜினி- கமல் கூட்டணி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு பிரச்னை இல்லை என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.