“திமுகவின் குற்றச்சாட்டு அதீத கற்பனை” – அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்!

 

“திமுகவின் குற்றச்சாட்டு அதீத கற்பனை” – அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்!

சென்னை ஆவடியில் தமிழ் வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டியதாக அதிமுக அரசின் மீது திமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய். திமுக ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும், விவசாயிகள் தற்கொலை அதிமுக ஆட்சியில் 52% குறைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பாக செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலையை குறைத்ததில் பெரும்பங்கு அரசுக்கு உண்டு” என்று தெரிவித்தார்.

“திமுகவின் குற்றச்சாட்டு அதீத கற்பனை” – அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்!

தொடர்ந்து, “உச்சநீதிமன்றமே சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டது. 90% விவசாயிகள் மனமுவந்து தங்களது நிலங்களை அத்திட்டத்திற்காக கொடுத்துள்ளனர். இந்த திட்டம், தமிழகத்தின் தொழிற்வளர்ச்சிக்கு உதவும். இது குறித்த குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்துள்ளது” என்று கூறினார்.

மேலும், “வேளாண் சட்டங்கள் தமிழக விவசாயிகள் விற்பனையை ஊக்குவிக்கும். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு அது ஊறுவிளைக்கும் இருப்பதாக தெரிவிப்பதால் அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. விவசாயிகள் தற்கொலையை தூண்டியதாக திமுகவின் குற்றச்சாட்டு அதீத கற்பனையே. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது” என்றும் கூறினார்.