கட்சித் தொண்டரை ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது – அமைச்சர் பாண்டியராஜன்

 

கட்சித் தொண்டரை ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது – அமைச்சர் பாண்டியராஜன்

திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டரை இழிவு படுத்தி பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கட்சித் தொண்டரை ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது – அமைச்சர் பாண்டியராஜன்

மக்களின் நலன் கருதி தமிழக அரசு நகரும் ரேஷன் கடை திட்டத்தை இன்று முதல் அமல்படுத்தியது. அதன் படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் விற்பனை தொடங்கிய நிலையில் ஆவடி, காமராஜ் நகர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த நகரும் ரேஷன் கடைகளை அமைச்சர் பாண்டியராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்து, மக்களுக்கு பொருட்களை வழங்கினார். மக்கள் அனைவரும் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

கட்சித் தொண்டரை ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது – அமைச்சர் பாண்டியராஜன்

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா கட்சியின் தொண்டரையே இழிவுப்படுத்தி பேசியது கண்டனத்துக்கு உரியது என்றும் அக்கட்சி எத்தகைய பிரமுகர்களை பெற்றிருக்கிறது என்பதை இந்த செயல் காட்டுகிறது என்றும் கூறினார்.

கட்சித் தொண்டரை ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது – அமைச்சர் பாண்டியராஜன்

மேலும், இப்படி பேசியதற்காக அந்த தொண்டர் ராசா மீது வழக்கு கூட தொடரலாம் என்றும் தெரிவித்தார். திமுக ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசா, “யாரு அவன், அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க” என அவருக்காக முழக்கம் எழுப்பிய தொண்டரை இழிவாக பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.