கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டார்- அமைச்சர் பாண்டியராஜன்

 

கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டார்- அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடி அருகே எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர் பாண்டியராஜன் மரியாதை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டார். கமல்ஹாசன் எம்ஜிஆர் மீதான திடீர் பாசத்தால், ஜெயலலிதா மீதான எதிர்ப்பு அரசியலாக வியூகம் வகுத்து வருகிறார். விஸ்வரூபம் திரைப்படம் வெளிவர வில்லை என்றால் இந்திய நாட்டை விட்டு வெளியேற போவதாக தெரிவித்திருந்தார் கமல். ஜெயலிதாவின் உதவி இல்லாமல் அந்த திரைப்படம் வெளிவந்து இருக்காது என பதிவு செய்தவர் கமல், தற்போது எம்ஜிஆர் இருந்திருந்தால் இதுபோன்று நேர்ந்திருக்காது என கூறுவது போலித்தனம், இது கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டதை காட்டுகிறது.

கமல்ஹாசன் முழு அரசியலுக்கு வந்துவிட்டார்- அமைச்சர் பாண்டியராஜன்

திரைப்படத்துறைக்கு புத்துயிர் அளித்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி என்பது துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். திரைத்துறையின் நிலையை திமுக ஆட்சியில் ஒப்பீட்டு கமல் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்த பின் எதிர்கட்சியாக கூட அதிமுக இடம் பெறாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் விரக்தியில் பேசிவருகிறார்.நாங்களும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் கட்சி தான், யூ டர்ன் அடிக்க பார்க்கிறது திமுக. தேர்தலில் ஏதாவது வியூகம் வகுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள், திமுகவின் போலித்தனத்தை கண்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் மத்தியில் அதிமுகவும் இருக்கும் வரவேற்பை கண்ட ஸ்டாலின், அதை தாங்க முடியாமல் இது போன்று பேசி வருகிறார்” என தெரிவித்தார்.